ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு கரோனா சோதனை கட்டாயம்

author img

By

Published : Feb 24, 2021, 10:58 AM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) இரண்டாவது அலை பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்குப் புதிய வழிகாட்டுமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தாா், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் விமானம் ஏறும்முன் 72 மணி நேரத்திற்குமுன் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை எனச் சான்று வைத்திருக்க வேண்டும். அந்தச் சான்றுடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

இதற்காக தனியார் பரிசோதனை மையம் மூலம் ரூ.1,200, ரூ.2,500 என இரண்டுவிதமான கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.1,200 கட்டண பரிசோதனை செய்தால் கரோனா முடிவு 6 மணியிலிருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ.1,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வுசெய்தார். மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குப் பரிசோதனைசெய்ய பணம் கட்டுவதற்குப் பணப்பரிமாற்றம் மையம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா, விமான நிலைய அலுவலர்கள், காவல் அலுவலர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க:தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நலமாக உள்ளனர்- தூத்துக்குடி ஆட்சியர்

இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) இரண்டாவது அலை பரவல் மீண்டும் அதிகரித்துவருவதால் வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்குப் புதிய வழிகாட்டுமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதையடுத்து சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு மத்திய கிழக்கு நாடுகளான துபாய், சாா்ஜா, அபுதாபி, குவைத், சவுதி அரேபியா, ஓமன், கத்தாா், இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் அனைவரும் விமானம் ஏறும்முன் 72 மணி நேரத்திற்குமுன் கரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை எனச் சான்று வைத்திருக்க வேண்டும். அந்தச் சான்றுடன் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மீண்டும் மருத்துவப் பரிசோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

இதற்காக தனியார் பரிசோதனை மையம் மூலம் ரூ.1,200, ரூ.2,500 என இரண்டுவிதமான கட்டணங்கள் நிா்ணயிக்கப்பட்டுள்ளன. ரூ.1,200 கட்டண பரிசோதனை செய்தால் கரோனா முடிவு 6 மணியிலிருந்து 8 மணி நேரத்திற்குள் கிடைக்கும். ரூ.1,500 கட்டண பரிசோதனை செய்தால் 2 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரத்திற்குள் முடிவு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆய்வுசெய்தார். மேலும் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்குப் பரிசோதனைசெய்ய பணம் கட்டுவதற்குப் பணப்பரிமாற்றம் மையம் அமைக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்

ஆய்வின்போது சுகாதாரத் துறை துணை இயக்குநர் பிரியா, விமான நிலைய அலுவலர்கள், காவல் அலுவலர்கள் இருந்தனர்.

இதையும் படிங்க:தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் நலமாக உள்ளனர்- தூத்துக்குடி ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.